தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், ''இப்போது படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். என்னுடைய முதல் படமான சித்திரம் பேசுதடியில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்த படம் முதல் 7 நாட்கள் ஓடவில்லை. அப்புறம்தான் ஹிட் ஆனது. அந்த சமயத்தில் நான் உற்சாகம் இல்லாமல் இருந்தேன். படங்களுக்கு தலைப்பு வைப்பது, அதை டிசைன் செய்வது தனிக்கதை. அதில் மணிரத்னம் வல்லவர். அவரின் படத்தலைப்பு, அந்த டிசைன் வித்தியாசமாக இருக்கும். பார்வையாளர்களை டக்கென கவரும்.
அதேபோல், ஒரு இயக்குனர் தன் பட ஹீரோயின்களுக்கு பெயர் வைப்பதிலும் ரகசியம் இருக்கிறது. அவருக்கு பிடித்த பெயரை, பல காலம் மனதில் சொல்லி பார்த்த பெயரை தான் வைப்பார். என் முதல் படமான சித்திரம்பேசுதடி ஹீரோயின் பெயர் சாரு. அது, சத்யஜித் ரே பட பாதிப்பில் வைத்தேன். இப்போது நடிகராக சில படங்களில் நடிக்கிறேன். அந்த வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. என்னை படக்குழுவினர் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்'' எனப் பேசினார்.