இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் நேற்று(ஆக., 10) உலகமெங்கும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு முதல்நாள் ரஜினி, இமயமலை பயணத்திற்காக புறப்பட்டு சென்றார். சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற ரஜினி அங்கிருந்து தனது நண்பர்களுடன் இமயமலை புறப்பட்டார்.
இந்த பயணத்தின் முதல்நாளில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷ் சென்றார் ரஜினி. சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றவர் அங்குள்ள துறவிகளை சந்தித்து அவர்களிடம் ஆசி பெற்றார். அவர்களின் சொற்பொழிவையும் கேட்டு மகிழ்ந்தார். அவரும் சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் அவர்களுக்கு உணவு அளித்தார். ரிஷிகேஷில் உள்ள சில கோயில்களுக்கும் சென்று வழிபட்டார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.