துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் ' ஜெயிலர்'. அனிரூத் இசையில் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் என மூன்று மொழி ஸ்டார்கள் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்சன் ஒரு பேட்டியில், "தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா சாரை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதில் ஒரு பவர்புல் போலீஸ் கதாபாத்திரம் இருந்தது. அதில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அந்த கதாபாத்திரத்தை சரியாக வடிவமைக்க முடியவில்லை. அதனால் பாலகிருஷ்ணா உடன் இதுகுறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.