பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் பிஸியான இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் ‛மாரி 2' படத்தில் வில்லனாக நடித்தார். வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2018 என்கிற படம் சூப்பர் ஹிட் ஆனது. பெரும்பாலும் யார் மீதும் எந்த வம்புக்கும் போகாதவர் என பெயர் வாங்கியவர் டொவினோ தாமஸ். ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஒரு குறிப்பிட்ட நபர் டொவினோ தாமஸ் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பரப்பியும் வந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசிபியிடம் நேரிலேயே சென்று புகார் அளித்துள்ளார் டொவினோ தாமஸ். அவரது புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பனங்காடு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.