துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் துல்கர் சல்மான்.. அவர் நடித்த சீதாராமம் படம் வெளியாகி ஒரு வருட கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கிங் ஆப் கோதா'. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக இது வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள சீனியர் இயக்குனர் ஜோஷியின் மகன் ஆவார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ‛கிங் ஆப் கோதா' வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்துள்ள துல்கர் சல்மான் ஐதராபாத்தில் இந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர்களான நானி மற்றும் ராணா இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.