ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராணுவம் தொடர்பான கதையில் இந்தப்படம் உருவாகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுதந்திர தினம் குறித்து பேசியுள்ள சிவகார்த்திகேயன், ‛‛200 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்து போராடி பெற்ற இந்திய விடுதலையை போற்றுவோம். ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் வெயிலும் பனியும் பாராமல் இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம். இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். தாய் மண்ணிற்கு வணக்கம்'' என தெரிவித்துள்ளார்.