பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. திஷா பதானி, நட்டி எனும் நட்ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பன்மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதை முடித்த பின்னர் சுதா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தனது பெற்றோரை பிரிந்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய அவர், ‛‛நான் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக வரும் செய்தி உண்மையில்லை. எனது பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோர் மும்பையில் படிக்கின்றனர். அவர்களை பார்க்க அடிக்கடி சென்று வருகிறேன். மற்றபடி நான் சென்னையில் தான் இருக்கிறேன்'' என்றார்.