நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி. ‛சில்ரன் ஆப் ஹெவன், முகம்மது : தி மெசஞ்சர் ஆப் காட், பியாண்ட் தி கிளவுட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இவர் பாலிவுட் சினிமா பற்றி கூறுகையில், ‛‛இந்தியாவில் திரைப்படம் உருவாக்க சிறந்த திறமையும், ஆற்றலும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள், கலாச்சாரங்கள் அதிகம் உள்ளன. ஆனால் பாலிவுட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. பாலிவுட் தன்னை மேம்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்னை தான்.
இன்றைக்கு மக்கள் சமூகவலைதளங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் உடனடியாக தெரிந்து கொள்கின்றனர். இப்போது எடுப்பது போன்று இன்னும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே பாலிவுட் தன்னை மாற்றிக் கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுக்க வேண்டும். இப்படி சொல்வதால் நான் பாலிவுட்டிற்கு எதிரானவன் அல்ல. அவர்கள் மாற வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நிறைய திறமையான இளம் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.