விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் |

பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி. ‛சில்ரன் ஆப் ஹெவன், முகம்மது : தி மெசஞ்சர் ஆப் காட், பியாண்ட் தி கிளவுட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இவர் பாலிவுட் சினிமா பற்றி கூறுகையில், ‛‛இந்தியாவில் திரைப்படம் உருவாக்க சிறந்த திறமையும், ஆற்றலும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள், கலாச்சாரங்கள் அதிகம் உள்ளன. ஆனால் பாலிவுட் அதை சரியாக பயன்படுத்தவில்லை. பாலிவுட் தன்னை மேம்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்னை தான்.
இன்றைக்கு மக்கள் சமூகவலைதளங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் உடனடியாக தெரிந்து கொள்கின்றனர். இப்போது எடுப்பது போன்று இன்னும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ஆகவே பாலிவுட் தன்னை மாற்றிக் கொண்டு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றபடி படங்களை கொடுக்க வேண்டும். இப்படி சொல்வதால் நான் பாலிவுட்டிற்கு எதிரானவன் அல்ல. அவர்கள் மாற வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். நிறைய திறமையான இளம் கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.