தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்ற ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜியின் குகை உள்பட பல இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். அதையடுத்து இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரஜினி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று அம்மாநில கவர்னரான சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அதன் பிறகு யாகோடா ஆசிரமகுரு பரமஹம்சர் யோகானந்தாவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்ற ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் தான் நடித்த ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார். அதன் பிறகு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த ரஜினி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.