இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன் பிறகு மகாநதி, சின்ன கவுண்டர், வால்டர் வெற்றிவேல், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், 2002ம் ஆண்டில் ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். என்றாலும் ஓராண்டுக்குள் திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்தார். அதன்பிறகும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தவர், கடைசியாக 2019ம் ஆண்டில் திருமணம் என்ற படத்தில் நடித்தார்.
இந்த நிலையில் சுகன்யா தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியின்போது, மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛‛இதுவரை அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை. இப்போது 50 வயதாகிறது. இனிமேல் நான் கல்யாணம், குழந்தை என்று இறங்கினால், பிறக்கப் போகும் குழந்தை என்னை அம்மா என்று அழைக்குமா? இல்லை பாட்டி என்று அழைக்குமா என்று நானே யோசித்துப் பார்க்கிறேன். என்றாலும் மறுமணம் வேண்டாம் என்றும் சொல்லவில்லை, வேண்டும் என்றும் சொல்லவில்லை'' என்று அந்த கேள்விக்கு இரண்டுவிதமான பதில் கொடுத்துள்ளார் சுகன்யா.