படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி 'ஜவான்' படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் சத்தமே இல்லாமல் ஒரு தமிழ் பெண் இயக்குனர் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அந்த படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி உள்ளது. அந்த பெண் இயக்குனர் பெயர் கலையரசி சாந்தப்பன். இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் உறவினர்.
சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்த அவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அங்கு திரைப்படம் தொடர்பான கிராபிக்ஸ் பணிகளை செய்து வருகிறார். ஏராளமான குறும்படங்கள், விளம்பர படங்களை இயக்கியுள்ள கலையரசி முதன் முதலாக பாலிவுட் படத்தை இயக்கி உள்ளார். 'மிஸ்ட்ரி ஆப் டாட்டூ' என்பது படத்தின் டைட்டில். இதில் அர்ஜூன் ராம்பால், அமிஷா படேல், டைய்சி ஷா, டாம் ஹென்றி என பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ரோஹித் ராஜ் கதை நாயகனாக நடித்திருக்கிறார். மகிழன் சந்தோஷ் இசை அமைத்திருக்கிறார்.
இதுகுறித்து கலையரசி சாந்தப்பன் கூறும்போது, “நான் பக்கா தமிழ் பெண். சென்னைதான் நான் பிறந்த ஊர். தரமணி இன்ஸ்டிடியூட்டில் டைரக்ஷன் கோர்ஸ் படித்து விட்டு குடும்பத்தோடு லண்டனில் செட்டிலாகிவிட்டேன். ஏற்கெனவே இரண்டு தமிழ் படங்களை தயாரித்திருக்கிறேன். நானே தமிழ் படம் இயக்க வேண்டும் என்று நினைத்த போது இந்தி படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்தார். அதனால் இந்தி படத்தை இயக்கி உள்ளேன். இந்த படத்தின் கதையை நம்பித்தான் முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். கொரோனா காலத்தில் லண்டனில் படப்பிடிப்பு நடத்தினோம். மிகுந்த சிரமத்திற்கு இடையில் படத்தை முடித்தோம். இந்தியில் நன்றாக படம் போகிறது. தமிழில் ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருப்பதால் இங்கு வெளியாகவில்லை. அடுத்து தமிழ் படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறேன். என்றார்.