கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் |
பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு என்கிற பிருத்விராஜ் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். தற்போது பப்லுவுக்கு 57 வயதாகிறது. ஆனாலும் வொர்க்-அவுட், பாசிட்டிவான மனநிலை என உடலளவிலும், மனதளவிலும் கட்டுமஸ்த்தாக இளமையுடன் இருக்கிறார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த 24 வயதே ஆன ஷீத்தல் என்பவருடன் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களது உறவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், சோஷியல் மீடியா பதிவுகளிலும், நேர்காணல்களிலும் தனக்கும் ஷீத்தலுக்குமான உறவு எத்தகையது என்பதை பப்லு விளக்கிவிட்டார். தற்போது ஷீத்தலுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் பப்லு அவருடன் சேர்ந்து ரொமான்ட்டிக்காக நடனமாடி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‛காவாலா' பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி உள்ளனர்.