திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும், வசூலையும் பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த தகவலை படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மிகச்சிறந்த நாள்.. எனது தந்தையுடன் டப்பிங் பணியில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.