பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை கடைசி நிமிடத்தில் திடீர் திடீரென மாற்றி வருகிறார்கள். வரும் வாரம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்த 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள். செப்டம்பர் 28ம் தேதியன்று “இறைவன், ரத்தம், பார்க்கிங், சித்தா,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் அந்தப் போட்டியில் தற்போது 'சந்திரமுகி 2' படமும் இணைகிறது.
இந்நிலையில் பெரிய கம்பெனிகளின் படங்களை இப்படி திடீரென மாற்றுவது குறித்து 'ரத்தம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். “தமிழ் சினிமாவின் மற்றுமொரு வேதனை என்னவென்றால், பெரிய கம்பெனிகளில் இருந்து வரும் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியை அப்படியே மாற்றுவது, தள்ளி வைக்கப்பட்ட வாரத்தில் வெளியாகும் படங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 28ம் தேதி ஐந்து புதிய படங்கள், மற்ற மொழிப் படங்கள் என ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள். பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை கடைபிடிக்கும் ஒழுக்கம் எங்கே ?. ரசிகர்களைப் பெற சவால்களை சந்திக்கும், சிறிய படங்கள் மற்றும் நடுத்தரத் திரைப்படங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களை செய்வது பரவாயில்லை. ஆனால், பெரிய படங்கள் இப்படி செய்வது, மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தில் படங்களின் வெளியீட்டில் எந்த ஒரு வரைமுறையையும் தயாரிப்பாளர்கள் கடைபிடிப்பதில்லை. ஒரு காலத்தில் தயாரிப்பாளர் சங்கங்களில் இது பற்றி பேசி ஒரு முடிவெடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டு தயாரிப்பாளர் சங்கங்கள் இருந்தும் பட வெளியீடுகள் தாறுமாறாக நடந்து வருகின்றன. இந்த வாரத்தில் கூட 6 நேரடி தமிழ்ப் படங்கள், 2 டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளன. பட வெளியீட்டில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் முறையை யார் கொண்டு வரப் போகிறார்கள் ?.