'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

திருமணம், விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலில் மொத்த கிளாமரையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கிறங்கடித்தார் சமந்தா. அதன் பிறகு அவர் கதையின் நாயகியாக நடித்த இரண்டு படங்கள் அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து அவர் நடித்து செப்டம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வந்த குஷி படம் வெற்றி பெற்றது. தற்போது நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் அடுத்தபடியாக சமந்தா ஆந்திர அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போவதாகவும், ஒரு பிரபல கட்சியில் அவர் இணையப் போவதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது சமந்தா சொல்லும் போது தான் தெரியவரும். ஏற்கனவே விஜயசாந்தி, ரோஜா, குஷ்பூ, நமீதா உள்ளிட்ட பல நடிகைகள் அரசியலில் உள்ள நிலையில், சமந்தாவும் அந்த பட்டியலில் இடம் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.