தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசை வாசித்து, இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் சாதனை நிகழ்த்தியவர், இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ்.
வளசரவாக்கம் மண்டலம், 130 வது வார்டு, வடபழனியில் குமரன் காலனி பிரதான சாலையில், மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ் இல்லம் அமைந்துள்ளது. அவர் நினைவாக, இச்சாலைக்கு, மாண்டலின் ஸ்ரீனிவாஸ் முதன்மை சாலை என பெயர் மாற்றப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.
இதனை மாநகராட்சி மேயர் பிரியா திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி மாண்டலின் ஸ்ரீனிவாசனின் தந்தை சத்திய நாராயணா, அவரது சகோதர் மாண்டலின் ராஜேஷ், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.