பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான 'கோல்டன் டிக்கெட் பார் இந்தியன் ஐகான்ஸ்' என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இந்த கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது. நேற்று நடிகர் ரஜினிகாந்தும் இந்த டிக்கெட்டை பெற்றார். அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வழங்கினார்.
இந்நிலையில் டிக்கெட் பெற்ற ரஜினி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛2023 ஐசிசி உலக கோப்பை தொடருக்காக பிசிசி-யிடமிருந்து மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பிசிசிஐக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புள்ள ஜெய்ஷா ஜி, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி,'' என பதிவிட்டுள்ளார்.