ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்தின் 170வது படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் . இதில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் திருவனந்தபுரம் பகுதியில் தொடங்குவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இதில் ரஜினி கன்னியாகுமரி பகுதி வட்டார வழக்கில் பேசி நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.