முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் |
மலையாள ‛பிரேமம்' படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தமிழில் மாரி 2, என்ஜிகே, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளம், தமிழை விட தெலுங்கில் தான் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்து பாலிவுட்டிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராணுவம் தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. இதுதவிர தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் சாய் பல்லவி மாலையும், கழுத்தமாக இருக்கும் போட்டோ ஒன்றை சிலர் வெளியிட்டு இவர்கள் திருமணம் செய்துவிட்டதாக செய்தி பரப்பினர். உண்மையில் அந்த போட்டோ ‛சிவகார்த்திகேயன் 21' பட பூஜையின் போது எடுக்கப்பட்டது. அதை சிலர் இப்படி திரித்து செய்தியாக பரப்ப டென்ஷன் ஆகிவிட்டார் சாய்பல்லவி.
இதுபற்றி சாய்பல்லவி வெளியிட்ட கோபமான பதிவு : ‛‛உண்மையாகவே என்னைப் பற்றி பரவும் வதந்திகளை நான் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் குடும்பம் போன்று இருக்கும் நண்பர்களை பற்றி வதந்தி பரப்பும் போது அதை பேச வேண்டி உள்ளது. என் சினிமா படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோவை வேண்டுமென்றே இதுபோன்று கிராப் செய்து பணத்திற்காக இப்படி ஒரு கேவலமான நோக்கத்தோடு பரப்பி வருகின்றனர். எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கமளிப்பது வேதனையாக உள்ளது'' என பதிவிட்டுள்ளார்.