சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாகசைதன்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக உருவாகி வரும் படம் 'தண்டேல்'. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து வரும் இந்த படத்தை கார்த்திகேயா-2 புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா ஒரு மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட, அதன் பின் நடக்கும் விஷயங்களை வைத்து விறுவிறுப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி இருவரும் ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடும் விதமாக 'மகா சிவராத்திரி' பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டும் சுமார் ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் இந்த பாடல் குறித்து கூறும்போது, “நாகசைதன்யா, சாய்பல்லவி ஆகியோரின் பிரமிக்கும் நடனத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அற்புதமான இசையில் இந்த பாடல் மிக ஸ்பெஷலானதாக இருக்கும். அது மட்டுமல்ல நீண்ட காலத்திற்கு இந்த பாடல் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளனர்.