இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளஸ் டூ படிக்கும் மாணவியான அவர் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக் கொண்டார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சோசியல் மீடியா சாட்டிங்கின் போது டீனேஜ் இளைஞர்கள் மனநிலை குறித்தும், அவர்களுக்கு சொன்ன அறிவுரையும் வைரலாகி வருகிறது. இந்த சாட்டிங்கின் போது ரசிகர் ஒருவர், டீனேஜ் இளைஞர்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூறுவீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “பொதுவாகவே இப்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. இதுதான் அவர்களிடையே உள்ள மிக மோசமான எண்ணம். ஆனால் இங்கிருந்து தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் எல்லாவித சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
சில நேரங்களில் இப்படி பயணிக்கும்போது நீங்கள் முன்பு இருந்ததை விட மிக அதிக பலமானவர்களாக கூட மாறுவீர்கள். இது எனக்கே நடந்துள்ளது. 25 வயதுக்கு முன் இருந்த நான் வேறு. இதேபோன்று பல பிரச்சனைகளை சந்தித்து எனது வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட சந்தோசமாக, பலமானவளாக, பாசிட்டிவான நபராக மாறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.