தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்து புகாரில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டமொன்றை தான் தொடங்க இருப்பதாகவும், ரூபாய் 200 கோடி முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் வரும் என்று சொல்லி தன்னிடத்தில் அவர் பண மோசடி செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் கடந்த மாத ஏழாம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காவல்துறை கைது செய்தது. அதையடுத்து அவரது தரப்பிலிருந்து இரண்டு முறை ஜாமின் மனு தாக்கல் செய்த போதும் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் உள்ள பண பரிவர்த்தனை தொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு சொல்லி ரவீந்திரன் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.