ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததில் இருந்து விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றதுடன் தொடர்ந்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினர்.ஆனால் தாங்கள் இருவரும் நட்பாக மட்டுமே பழகி வருகிறோம் என தொடர்ந்து இருவரும் கூறி வந்தாலும் சில நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வது இந்த செய்திகளுக்கு இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது.
இன்னொரு பக்கம் இவர்கள் இருவருமே அடிக்கடி தனித்தனியாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாகத்தான் வெளிநாட்டு சுற்றுலாவில் பொழுதுபோக்குகிறார்களோ என்று யோசிக்க வைக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே இரண்டு முறை இது போன்று புகைப்படங்கள் வெளியிட்டு யூகங்களை அதிகப்படுத்திய ராஷ்மிகா தற்போது லேட்டஸ்டாக துருக்கியில் ஒரு காபி ஷாப்பில் தான் அமர்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் விஜய் தேவரகொண்டாவும் இதே காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இருவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தான் ஒவ்வொருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிட்டு வருகிறார்களோ என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.