ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 170 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது அப்படக் குழு அங்கிருந்து இடம்பெயர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பனங்குடியில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்கள். இந்த ஊரில் மூன்று நாட்கள் ரஜினி 170 வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ரஜினிகாந்த் நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு காரில் சென்றார். அங்கே ரசிகர்கள் படை எடுத்துள்ளார்கள். அப்போது காவல்துறை பாதுகாப்பாக ரஜினியை படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் பனங்குடிக்கு ரஜினி காரில் சென்ற போது காருக்குள் இருந்தபடியே ரசிகர்களுடன் கைக்குலுக்கிய வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 170வது படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.