திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கில் முதல் முறையாக இயக்கி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்துடன் தமிழில் 'இந்தியன் 2' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங்கை ஆரம்பித்துவிட்டார் என்று படக்குழுவினர் வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவில் ஷங்கரும் உடனிருந்தார். இது பற்றி தெலுங்கு மீடியாக்கள் தவறான செய்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். 'இந்தியன் 2' டப்பிங்கில் ஷங்கர் இருந்தால், 'கேம் சேஞ்சர்' படத்தை தற்போது யார் இயக்கி வருகிறார்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார் ஷங்கர். “ஹைதராபாத்தில் நேற்று முதல் எங்களது 'கேம் சேஞ்சர்' படத்திற்காக உணர்ச்சிபூர்வமான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு அப்பா மறைந்ததை அடுத்து நேற்று அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. அந்த சூழலிலும் நேற்றிரவு படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்து வதந்தி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.