இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் விஜயசாந்தி. இன்றைக்கும் 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படம் ஒரு மைல் ஸ்டோனாக கருதப்படுகிறது. அதன்பிறகும் பல ஆக்ஷன் படங்களில் நடித்தார். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயசாந்தி சினிமாவில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆகிறது.
இதையொட்டி அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது: சினிமாவில் என்னை பாரதிராஜா 1979ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதே ஆண்டு தெலுங்கிலும் கிருஷ்ணா ஜோடியாக நடித்தேன். அந்த காலத்திலேயே ஹீரோக்களுக்கு இணையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது நான்தான். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தேன். சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு சமமாக நடித்ததால் ரசிகர்கள் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைத்து என்னை பெருமைப்படுத்தினர்.
நான் நடித்த 'ஒசே ராமுலம்மா' படம்தான் எனக்கு மிகவும் பிடித்த படம். தெலுங்கானாவில் ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் புரட்சி பெண்ணாக நடித்தேன். இப்போதுகூட என்னை தெலுங்கானாவில் ராமுலம்மா என்று அழைக்கிறார்கள். என்னை இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய ரசிகர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.