தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.
அதே போல, அதே படத்திற்காக சிறந்த பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பெற்றார். அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீபிரசாத் இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் தற்போது வசிக்க, தேவிஸ்ரீபிரசாத் சென்னையில்தான் இன்னமும் வசித்து வருகிறார்.
நேற்று தேசிய விருது பெற்ற பிறகு தேவிஸ்ரீபிரசாத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்து அல்லு அர்ஜுன், “எனது பால்ய நண்பர், எனது இசையமைப்பாளர், எனது நலம் விரும்பி, எனது உற்சாகத் தலைவருடன் சேர்ந்து பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. முதல் முறையாக இருவரும் ஒன்றாக சேர்ந்து பெற்றது மிக்க மகிழ்ச்சி. சென்னை சாலைகளிலிருந்து, டில்லி அரங்கு வரை… இது ஒரு 25 வருடப் பயணம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.