பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மீண்டும் அவர் இயக்கும் தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இயக்குநர்கள் கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது குறித்த புகைப்படத்துடன் ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விஷால்.
அதில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றபோது சரியாக மழையும் வந்தது. இதை எங்களை இறைவனே வாழ்த்தியது போல் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் விஷால். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.