ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போகிறார். சூர்யாவின் 43வது படமாக உருவாகும் இதில் நாயகியாக நஸ்ரியா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவியின் 100வது படமாகும். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யா, சுதா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர்கள் போராட்டம், போலீசார் அவர்களை அடக்குவது, துப்பாக்கிச்சூடு போன்ற குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும் புறநானுறு என குறிப்பிட்டு மேலே இரண்டு விஷயங்களை லேபிள் போட்டு மறைத்துள்ளனர்.
1965ல் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி இந்த படம் உருவாக போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களும் அவ்வாறே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். படம் முழுக்க இந்த விஷயம் வரப்போகிறதா அல்லது அதை மையமாக வைத்து நடப்புகால அரசியல் சம்பவங்களையும் வைத்து இந்த படம் உருவாக போகிறதா என அடுத்தடுத்த அப்டேட்டுகளில் தெரிய வரும்.