இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் மாறி வரும் கலையுலகில் மாறா இளமையோடு, இன்றும் மனம் கவர்ந்த திரை ஆளுமையாக வாழ்ந்து வரும் நடிகர் சிவகுமாரின் 82வது பிறந்த தினம் இன்று… “காக்கும் கரங்கள்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். குறிப்பாக “பொன்னுக்கு தங்க மனசு”, “கண்மணி ராஜா”, “அன்னக்கிளி”, “உறவாடும் நெஞ்சம்”, “கவிக்குயில்”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”, “பூந்தளிர்” மற்றும் இவரது 100வது படமான “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”, “அக்னி சாட்சி” மற்றும் “சிந்து பைரவி” ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கியமான படங்களாகும்.
சிவகுமார் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!'' என குறிப்பிட்டுள்ளார்.