லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் மாறி வரும் கலையுலகில் மாறா இளமையோடு, இன்றும் மனம் கவர்ந்த திரை ஆளுமையாக வாழ்ந்து வரும் நடிகர் சிவகுமாரின் 82வது பிறந்த தினம் இன்று… “காக்கும் கரங்கள்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். குறிப்பாக “பொன்னுக்கு தங்க மனசு”, “கண்மணி ராஜா”, “அன்னக்கிளி”, “உறவாடும் நெஞ்சம்”, “கவிக்குயில்”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”, “பூந்தளிர்” மற்றும் இவரது 100வது படமான “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”, “அக்னி சாட்சி” மற்றும் “சிந்து பைரவி” ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கியமான படங்களாகும்.
சிவகுமார் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!'' என குறிப்பிட்டுள்ளார்.