'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களை நெல்சன் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கோலமாவு கோகிலா படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது நயன்தாரா அன்னபூரணி, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, கமல் 234வது படம் என பல படங்களில் நடித்து வரும் நிலையில், கோலமாவு கோகிலாவுக்கு பிறகு தான் கதையின் நாயகியாக நடித்த படங்கள் ஹிட்டாக அமையாததால், மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நயன்தாராவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், நயன்தாராவை வைத்து தான் இயக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.