இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களை நெல்சன் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கோலமாவு கோகிலா படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது நயன்தாரா அன்னபூரணி, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, கமல் 234வது படம் என பல படங்களில் நடித்து வரும் நிலையில், கோலமாவு கோகிலாவுக்கு பிறகு தான் கதையின் நாயகியாக நடித்த படங்கள் ஹிட்டாக அமையாததால், மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நயன்தாராவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், நயன்தாராவை வைத்து தான் இயக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.