தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர் ரத்னகுமார். அதையடுத்து மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டபோது, ‛‛எவ்வளவு உயர பறந்தாலும் பசிச்சா கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும்'' என்று பேசி இருந்தார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை பேசியிருந்தார் ரஜினி. இதுபற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிண்டலாக ரத்னகுமார் பேசியதாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான குரல்கள் எழுந்தன.
இப்படியான நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போகிறேன். என்னுடைய அடுத்த படம் அறிவிப்பு வரும் வரை ஆப்லைன் செல்கிறேன் என்று அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ரத்னகுமார் நேற்று பேசியதற்கு எதிராக எதிர் விளைவுகள் தொடர்ந்து வரும் என்பதால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.