பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர் ரத்னகுமார். அதையடுத்து மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டபோது, ‛‛எவ்வளவு உயர பறந்தாலும் பசிச்சா கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும்'' என்று பேசி இருந்தார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை பேசியிருந்தார் ரஜினி. இதுபற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிண்டலாக ரத்னகுமார் பேசியதாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான குரல்கள் எழுந்தன.
இப்படியான நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போகிறேன். என்னுடைய அடுத்த படம் அறிவிப்பு வரும் வரை ஆப்லைன் செல்கிறேன் என்று அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ரத்னகுமார் நேற்று பேசியதற்கு எதிராக எதிர் விளைவுகள் தொடர்ந்து வரும் என்பதால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.