2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் |

தசெ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளிவந்த படம் 'ஜெய்பீம்'. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான அப்படம் ஓடிடியில் வெளியானது. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
அப்படத்தில் காவல் துறையினரின் கொடுமைக்கு ஆளாகும் விளிம்பு நிலை குடும்பம் ஒன்றின் கதையை உணர்வுபூர்வமாகக் கொடுத்திருந்தார்கள். அதன் பின் அம்மக்களுக்கு அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் செய்யப்படுவது அதிகமானது.
நேற்று இப்படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அது பற்றி எக்ஸ் தளத்தில் நடிகர் சூர்யா அரசு வழங்கியுள்ள உதவிகள் குறித்த பட்டியல் ஒன்றைப் பதிவிட்டு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்,” என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.