இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தசெ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளிவந்த படம் 'ஜெய்பீம்'. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான அப்படம் ஓடிடியில் வெளியானது. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
அப்படத்தில் காவல் துறையினரின் கொடுமைக்கு ஆளாகும் விளிம்பு நிலை குடும்பம் ஒன்றின் கதையை உணர்வுபூர்வமாகக் கொடுத்திருந்தார்கள். அதன் பின் அம்மக்களுக்கு அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் செய்யப்படுவது அதிகமானது.
நேற்று இப்படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அது பற்றி எக்ஸ் தளத்தில் நடிகர் சூர்யா அரசு வழங்கியுள்ள உதவிகள் குறித்த பட்டியல் ஒன்றைப் பதிவிட்டு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்,” என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.