இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கவிருந்த படம் 'வணங்கான்'. ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக பாலா, சூர்யா என இருவருமே அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கின்றார். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால், இந்த போஸ்டரை நடிகர் சூர்யாவின் தெருவில் மட்டும் ஒட்ட வேண்டாம், இது அவரை காயப்படுத்த வாய்ப்புள்ளது என பாலா தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.