சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரு புகைப்படத்தில் அல்லது வீடியோவில் இருக்கும் ஒருவரது முகத்தை இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் சோசியல் மீடியாவில் பலரும் போலியான வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இப்படித்தான் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஷாரா படேல் என்பவரின் முகத்தில் இணைத்து டீப் பேக் வீடியோ வெளியிட்டிருந்தார்கள்.
இதற்கு பலத்த கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது மத்திய அரசும் அதை தடுப்பதற்கு ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்பின் டீப் பேக் வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் இதுகுறித்து புகார் அளிக்குமாறு கேத்ரினா கைப்பை வலியுறுத்தி வருகிறார்கள்.