‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் |
திருச்சூர்: நடிகர் கலாபவன் மணி மரண விவகாரத்தில் திடீர் திருப்பமாக அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததே மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழில் ‛ஜெமினி', ‛மறுமலர்ச்சி', ஜே.ஜே., உனக்கும் எனக்கும், வாஞ்சிநாதன், குத்து, எந்திரன், மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கலாபவன் மணி, 46. கடந்த 2016-ம் ஆண்டு திருச்சூர் , சாலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.
திருச்சூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை நடத்தியதில், அவரது ரத்தத்தில் எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து 2019-ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் விசாரித்த ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் கூறியது,
கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் 10 முதல் 12 பாட்டீல் வரை பீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 2016 ம் ஆண்டு மரணமடைவதற்கு முன் 10 பாட்டீல் பீர் குடித்ததில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த வாந்தி எடுத்த நிலையில் மேலும் பீர் குடித்ததால் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவு இருந்தது பிரேதபரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் மரணமடைந்தார் என்றார்.