தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தீபாவளி வந்த பின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு முக்கியமான படங்களை வெளியிட மாட்டார்கள். தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எப்படியாவது இரண்டு வாரங்களாவது தாக்குப் பிடித்து ஓடிவிடும் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். தீபாவளிக்கு வெளியான நான்கு படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும் எப்படியாவது இரண்டு வாரத்தைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கிறார்கள்.
இந்த வார வெள்ளிக்கிழமையான நவம்பர் 17ம் தேதி முக்கிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இரண்டு சிறிய படங்கள் மட்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த், அவிதேஜ் ரெட்டி நடித்துள்ள 'சைத்ரா' படமும், 'அம்புநாடு ஒம்பது குப்பம்' படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் அறிவிப்பைத் தவிர வேறு படங்களின் அறிவிப்பு வரவில்லை.
அதே சமயம் நவம்பர் 24ம் தேதி, டிசம்பர் 1ம் தேதிகளில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளன.