இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமா உலகில் தியேட்டர்களுக்கென இரண்டு சங்கங்கள் உள்ளன. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் என்ற ஒரு சங்கமும், தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் என மற்றொரு சங்கமும் உள்ளன. இதில் இரண்டாவது சங்கத்திற்கு திருப்பூர் சுப்பிரமணியம் தலைவராக உள்ளார்.
அவர் திருப்பூரில் சக்தி சினிமாஸ் என்ற பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறார். திரையுலகம் சார்ந்த பல பிரச்சனைகளில் அவர் குரல் கொடுப்பது வழக்கம். சமீபத்தில் 'லியோ' படம் குறித்து அவர் பேசிய பல வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'டைகர் 3' ஹிந்திப் படத்தை அவரது தியேட்டரில் அரசு அனுமதி பெறாமல் காலை 7 மணிக்கும், இரவு 11 மணிக்கு மேலும் சிறப்புக் காட்சிகளைத் திரையிட்டார்.
அது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. ஒரு சங்கத்தின் தலைவரே இப்படி செய்யலாமா என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் அவர் இன்று தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து சங்க செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இப்பவும் எனது சொந்த வேலை காரணமாக நமது சங்கத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். இதுகாறும்(இதுவரை) ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.