கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. ஆமதாபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன். இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு “பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் ரொம்ப தூரம் ஓடுங்கள்” என்றும், “கிரிக்கெட் கோப்பைக்கும் உங்கள் நிர்வாணத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றும் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இது ஒரு விளம்பர ஸ்டண்ட் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
இதேபோன்றுதான் 2011ம் ஆண்டில் உலக கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று பூனம் பாண்டே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.