ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். விஜய்யின் 'நாளைய தீர்ப்பு' படத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'காலா' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 'அழியாத கோலங்கள்' இரண்டாம் பாகத்தில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள தமிழ் படம் 'ஆலகாலம்'.
ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெயகி இயக்கத்தில் உருவாகி உள்ளது. ஜெயகி, சாந்தினி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயகி கூறும்போது “சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது. ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே படம். அந்த தாயாக முதன்மை கேரக்டரில் ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்” என்றார்.