பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். விஜய்யின் 'நாளைய தீர்ப்பு' படத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'காலா' படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 'அழியாத கோலங்கள்' இரண்டாம் பாகத்தில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள தமிழ் படம் 'ஆலகாலம்'.
ஸ்ரீஜெய் புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெயகி இயக்கத்தில் உருவாகி உள்ளது. ஜெயகி, சாந்தினி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜெயகி கூறும்போது “சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது. ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே படம். அந்த தாயாக முதன்மை கேரக்டரில் ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்” என்றார்.