இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா குறித்து ஆபாசமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்திலும் அது தொடர்பாக புகார் அளித்தார். அதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேசமயம் மணிப்பூரில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட போது நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என்று சோசியல் மீடியாவில் குஷ்புவை நோக்கி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, கொச்சையான வார்த்தை பிரயோகம் செய்தார்கள். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக, உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவாகரத்தில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை கவனித்து பாருங்கள் என்று பதிவிட்டிருந்தார் குஷ்பு.
அந்த பதிவில் அவர் சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. பலரும் குஷ்புவை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த எதிர்ப்புகளை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. நான் கிண்டலுடன் பதிவிட்ட பதிவு அது. அதோடு சேரி என்றால் பிரெஞ்சு மொழியில் நேசிப்பவர் என்று அர்த்தம். நான் அன்பை பகிர்ந்து கொள்வதற்காக கிண்டலாக அந்த வார்த்தையை பதிவிட்டு இருந்தேன். நான் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முன் நிற்க கூடியவள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் குஷ்பு.