பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பான் இந்தியா படம். திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடந்து வந்தது.
சண்டை காட்சி ஒன்றில் சூர்யா நடித்தபோது ரோப் கேமரா விழுந்து காயம் அடைந்தார். கேமரா விழுவதை பார்த்து அவர் விலகியதால் நூலிழையில் தப்பினார். ஆனாலும் தோள்பட்டையில் கேமரா உரசியபடி விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சூர்யா தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய நண்பர்கள் மற்றும் அன்பான ரசிகர்களே, நான் விரைவில் குணமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு நன்றி. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வருகிறேன். உங்களின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.