நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் |
தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை பார்த்த ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதோடு எனக்கும் கதை பண்ணுங்க. பியூச்சரில் நாம் இணைந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். அப்படி ரஜினி பேசியிருந்த ஆடியோவும் அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதையடுத்து ரஜினிக்காக கதை தயார் செய்து கொண்டு அவரை அணுகினார் தேசிங்கு பெரியசாமி. அவர்கள் இணையப்போவதாக செய்திகள் வெளியானபோதும் அந்த கூட்டணி உறுதியாகவில்லை.
இந்த நிலையில் அதே கதையை சிம்புவிற்கு சொல்லி ஓகே பண்ணிவிட்டார் தேசிங்கு பெரியசாமி. சிம்புவின் 48வது படமாக உருவாகும் அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் அந்த படத்திற்காக தற்போது தனது உடல் கட்டை தயார்படுத்தி வருகிறார் சிம்பு.
இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி அளித்த ஒரு பேட்டியில், எனது அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ரஜினி இடத்தில் நான் கூறிய போது, எனக்கு வாழ்த்து தெரிவித்தவர், நல்லா சூப்பரா பண்ணுங்க என்று தெரிவித்தார் என கூறியிருக்கும் தேசிங்கு பெரியசாமி, சிம்புவும் இந்த படத்தில் நடிப்பதில் மிக ஆர்வமாக இருக்கிறார். பல மாதங்களாக சில பயிற்சிகளை பெற்று தனது பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.