விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தின் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கி தனது பாடி லாங்குவேஜ் பக்காவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிப்பதற்கு சிம்பு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே வல்லவன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ள சிம்பு, மன்மதன் படத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பணியாற்றி இருந்தார்.
நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தற்போது இயக்கி நடித்துவரும் நிலையில் சிம்புவும் அதே பாணியில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.