தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபலமாக வலம் வந்த சீனியர் நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை ரியூனியன் என்கிற பெயரில் ஒன்று கூடி அந்த சந்தோஷத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதை நடிகைகள் சுகாசினி, லிசி, ராதிகா உள்ளிட்டோர் மாற்றி மாற்றி எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் ரகுமானின் மகள் திருமணத்தின்போது இதேபோன்று எண்பதுகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இதில் நடிகைகள் சுகாசினி, ஷோபனா, ரேவதி, அம்பிகா, நதியா, மேனகா, பார்வதி, ஜெயஸ்ரீ மற்றும் நடிகர்கள் மோகன், பானு சந்தர், பாக்யராஜ், சுந்தர் சி, உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ரகுமானின் மைத்துனரான இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.