சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தமிழில் 'மூனே மூணு வார்த்தை, கவண்' போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷனா ராஜேந்திரன். தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேப்போல் கனா, துணிவு போன்ற படங்களில் நடித்தவர் தர்ஷன்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. 'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ், இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசை அமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குநர் தமிழ் கூறும்போது, “ பெருமாள் முருகனின் இந்த நாவல் என்னைப் பாதித்ததால் படமாக்க முடிவு செய்தேன். தர்மபுரி பகுதியில் நடந்து வரும் சாதிய அரசியல்தான் கதைக்களம். நாவலை அப்படியே படமாக்காமல் சினிமாவுக்காக சில மாறுதல்களை செய்திருக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் இயல்பான நடிகை ஒருவர் தேவைப்பட்டார் அதற்காகவே தர்ஷனா ராஜேந்திரனை தேர்வு செய்தோம்" என்றார்.