இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் திரையுலகம் சார்பில் டிச., 24ல் பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா சங்கமும் ஒன்று கூடி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க இருந்தனர். அவர்களுக்கான அழைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் பன்மொழியில் இருந்தும் முக்கிய கலைஞர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் நடக்கும் என தெரிகிறது. தற்போது சென்னையில் பெய்த பெரு வெள்ளம் பாதிப்பால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.