'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ஜெயிலர் படத்திற்கு பின் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.
இந்நிலையில் ரஜினி பிறந்தநாளான இன்று(டிச., 12) படத்திற்கு ‛வேட்டையன்' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில் ஸ்டைலாக நடந்து வரும் ரஜினி, கண்ணாடியை அவரது ஸ்டைலில் மாட்ட, ‛குறி வச்சா இரை விழணும்' என பஞ்ச் டயலாக் பேசி உள்ளார்.