படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த வருடம் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் மூலமாக படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கிய ரிஷப் ஷெட்டி அதற்கு முன்பு இருந்ததைவிட தற்போது இந்திய அளவில் தெரிந்த நடிகராகிவிட்டார். தற்போது காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான கெரடியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை தனது ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை மூலமாக தத்தெடுத்துள்ளார். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் முன்னெடுப்பாக இந்த செயலில் இறங்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி. இது தொடர்பாக இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமத்தில் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பெரியவர்களுடன் கலந்துரையாடினார் ரிஷப் ஷெட்டி.