பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது குறித்து நெல்சன் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் அவர் பேசும்போது, ‛‛ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதற்கு சில முக்கிய நடிகர்களிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இன்னும் யார் என்பது முடிவாகவில்லை. என்றாலும் ஒரு மாதத்திற்குள் எனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்'' என்றார் நெல்சன். தனது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை என்றாலும் தனுஷின் 51வது படத்தை தான் அடுத்து அவர் இயக்கப் போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.